சந்தன மரங்களை திருடி சென்ற மர்மநபர்கள்...

பதினைந்து சந்தன மரங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர் ஐம்பதுக்கும் மேற்பட்ட மரங்களை சேதப்படுத்தியுள்ளனர்.

சந்தன மரங்களை திருடி சென்ற மர்மநபர்கள்...

கடலூர் | திட்டக்குடி அடுத்துள்ள ம.புடையூர் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி இவர் தனது நிலத்தில் அரசு அனுமதி பெற்று  107 சந்தன மரக்கன்றுகளை  கடந்த 15 வருடங்களாக வளர்த்து வந்துள்ளார்.

தற்பொழுது   வனத்துரையினரிடம் சந்தன மரங்களை  வெட்டுவதற்கு அனுமதி பெற்றுள்ள நிலையில், நேற்று மர்ம நபர்கள் இரவு வயலில் இருந்த 15 சந்தன மரங்களை வெட்டி கடத்தி  சென்றுள்ளனர். மேலும்  50க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

காலையில் நாராயணசாமி  வயல் பகுதிக்கு சென்றபோது, அங்கு சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

மேலும் படிக்க | இனி எவனும் இது போல செய்ய நடுங்குவான்... பெண்ணின் தைரிய செயலால் பதறி போன நபர்...