தனிநீதிபதி கருத்துக்கு எதிராக அமைச்சர் சேகர்பாபு புகார் மனு!

சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாடு குறித்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது, சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

இதையும் படிக்க : கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

இந்த நிலையில், சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாடு குறித்து தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் சேகர் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உச்சநீதிமன்ற வழிமுறைகளை தனிநீதிபதி பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.