இனி எவனும் இது போல செய்ய நடுங்குவான்... பெண்ணின் தைரிய செயலால் பதறி போன நபர்...

நடந்து சென்ற பெண்ணை பின்னால் தட்டி சில்மிஷம் செய்த நபரை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரை நன்கு கவனித்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இனி எவனும் இது போல செய்ய நடுங்குவான்... பெண்ணின் தைரிய செயலால் பதறி போன நபர்...

திண்டுக்கல் | பழனியருகே திருநகரில் வசித்து வருபவர் முகமது அலிஜின்னா‌(33). மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகைவீட்டில் வசித்து வரும் முகமது அலி ஜின்னா பழனி அடிவாரம் பகுதியில் சைக்கிளில் தேநீர் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நடந்து சென்றபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது அலி ஜின்னா என்பவர் பெண்ணை பின்புறம் தட்டி சென்றுள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிடுவதை கேட்டு அங்குவந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முகமது அலி ஜின்னா வை விரட்டிசென்று பிடித்தனர்.

மேலும் படிக்க | போராட்டத்தில் குதித்த பெரியார் திராவிடர் கழகத்தினர்...ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்...!

அப்போது பாதிக்கப்பட்ட பெண் முகமது அலி ஜின்னா வை செருப்பால்  அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சில்மிஷ பேர்வழி முகமது அலி ஜின்னா வை நன்கு கவனித்து வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தற்போது பழனி அரசு மருத்துவமனையில் போலீசார் பாதாகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெண்ணிடம் சில்மிசம் செய்து சிக்கிய நபரை பாதிக்கப்பட்ட பெண்‌ செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும், 20 ல்கிட்டர் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்த அதிகாரிகள்...