தன்னை கடித்த ராஜநாகத்தை கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனை வந்த இளைஞர்...
கர்நாடகாவில் தன்னைக் கடித்த ராஜநாகத்தை கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விவசாயி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள உப்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கடப்பா. இவர் நேற்று தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ராஜநாகம் ஒன்று அவரை கடித்துள்ளது. இதையடுத்து உடனடியாக தன்னை கடித்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்த கட்டப்பா, அதை கையில் எடுத்து கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு அங்கே விசமுறிவு ஊசி போடப்பட்டது. பின்னர் மருத்துரிவன் பரிந்துரையின் படி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே ராஜநாகம் அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.