காரில் கொண்டுவரப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்...! போலீசாரிடம் சிக்கிய சம்பவம்...!

காரில் கொண்டுவரப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்...! போலீசாரிடம் சிக்கிய சம்பவம்...!

சென்னை கொடுங்கையூர் பகுதியில்  கடந்த மூன்றாம் தேதி கொடுங்கையூர் போலீசார் ரோந்து பணியின் போது வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்கிற வெள்ளை பிரகாஷ்(31) மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த விக்ரமாதித்தன்(37) ஆகிய இருவரையும் பிடித்தனர். இவர்களது காரில் 34 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புளியந்தோப்பைச் சேர்ந்த ரவுடியை கொலை செய்வதற்காக இவர்கள் திட்டம் தீட்டியது தெரியவந்தது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டன. இதனை இன்று  கொடுங்கையூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இனணந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தீவிரமாக ஆராய்ந்து அதனை மூன்று முறை யாருமில்லாத பகுதியில் வெடிக்க செய்து அப்புறப்படுத்தினர். இதனை அடுத்து கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க :மாண்டஸ்’ புயலின் எதிரொலி...! தயார் நிலையில் மின்வாரிய ஊழியர்கள்...!