ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை; மக்கள் அச்சம்..!

ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை; மக்கள் அச்சம்..!

கோவை வடவள்ளி டைடல் பார்க் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த ரேசன் கடையை சூறையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கோவை வடவள்ளி கல்வீராம்பாளையம், பொம்மனாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக,   உணவு தேடி இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. அப்போது குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் மதில் சுவரை சேதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் வடவள்ளி நவாவூர் பகுதியில் உலா வந்த காட்டு யானை ஒன்று, டைசல் பார்க் பகுதியில் இருந்த ரேசன் கடையின் கதவை உடைத்து சூறையாடி, அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து உண்டது.

இதையடுத்து தகவலறிந்து வனத்துறையினர் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

காட்டு யானை ரேசன் கடையை உடைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. காட்டு யானையின் இந்த அச்சுறுத்தும் சேட்டைகளைக் கண்டு அப்படுகிகி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 

இதையும் படிக்க   | இராமநாதபுரம்: ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி ஆட்சியரிடம் மனு..!