5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு - ஆம்னி நிறுவனம் அதிரடி

5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை இங்கிலாந்தின் பிரபல நாய் உணவு தயாரிக்கும் ஆம்னி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு - ஆம்னி நிறுவனம் அதிரடி

செல்லப்பிராணியான நாய்களுக்கு உணவு தயாரிக்கும் ஆம்னி நிறுவனம் காய்கறிகள், பழங்கள் கொண்டு புதிதான முறையில் மனிதர்களும் சாப்பிடும் வகையில் ரசாயனங்கள் எதுவும் சேர்க்காமல் உணவு தயாரித்து வருகிறது.

இந்நிலையில் மக்களிடையே தங்களின் நிறுவனத்தை பிரபலப்படுத்தும் விதமாக ஒரு போட்டியை அறிவித்துள்ளது. அதன்படி ஆம்னி நிறுவனத்தின் நாய் உணவை ஒரு நபர் ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

மேலும், இந்த போட்டியில் கலந்து கொள்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.