ராகுல்காந்திக்கு சொத்துக்களை எழுதி வைத்த மூதாட்டி! நெகிழ்ச்சி தருணம்

ராகுல்காந்திக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்த 78 வயது மூதாட்டி....

ராகுல்காந்திக்கு சொத்துக்களை எழுதி வைத்த மூதாட்டி! நெகிழ்ச்சி தருணம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு, 78 வயது மூதாட்டி தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் டேராடூனில் அரங்கேறியுள்ளது.

ஓய்வு பெற்ற அரசு ஆசிரியையான மூதாட்டி புஷ்பா, தனக்கு சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து மற்றும் 100 கிராம் தங்க நகைகளை ராகுல்காந்தியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

ராகுல்காந்தியின் கொள்கைகள் இந்நாட்டுக்கு தேவை என்றும், அவரது கருத்துக்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அதனால்தான் தன் சொத்துக்களை ராகுல்காந்தி பெயரில் எழுதி வைத்துவிட்டதாகவும் புஷ்பா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.