வணிகர்களின் ஆரோக்கியத்தை முன்னிட்டு நடைபயணம்..!

வணிகர்களின் ஆரோக்கியத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நடைபயணம் நடைபெற்றது.

வணிகர்களின் ஆரோக்கியத்தை முன்னிட்டு நடைபயணம்..!

தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் ரூபி ஜூபிலி விழா வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று எம்ஜிஆர் பூங்காவில் நடைபயணத்தை அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் தலைவர் தமிழரசு கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணியானது எம்ஜிஆர் பூங்காவில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பழைய துறைமுகம் வரை சென்றது. இதில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட தொழில் வர்த்தக சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வணிகர்களின் ஆரோக்கியத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நடை பயணத்தில் ஒரு பகுதியாக நகரின் முக்கிய வீதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.