வ.உ.சி அவர்களின் 150 வது பிறந்தநாள்... முதலமைச்சர் மலர் தூவி மரியாதை...

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

வ.உ.சி அவர்களின் 150 வது பிறந்தநாள்... முதலமைச்சர் மலர் தூவி மரியாதை...

கப்பலோட்டிய தமிழன்,  செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படுகின்ற வ.உ.சி அவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் நிலையில் அவரது முழு உருவச் சிலைக்கு மலர் மாலை இடப்பட்டு, சிலையின் பீடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வ.உ.சி. தம்பரனார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் ,  சிதம்பரனாரின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றிருந்த செய்தி மக்கள் தொடர்புத்  துறையின் துண்டறிக்கையை அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார்.

அமைச்சர்கள் சேகர்பாபு, கே .என் நேரு, மா.சுப்பிரமணியன், இராஜ கண்ணப்பன், செந்தில் பாலாஜி, வெள்ளக்கோயில் சாமிநாதன், பொன்முடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன்,  சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி உள்ளிட்டோர் முதல்வருடன் வருகை தந்து வ.உ.சி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.