வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி... 4 பெண்கள், 5 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்த சோகம்...

கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடுபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி... 4 பெண்கள், 5 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்த சோகம்...

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  பேரணாம்பட்டு அருகேயுள்ள ஏரிகுத்தி பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வந்ததை தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டது.

இதில் அங்கிருந்த வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வீடு இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ள அவர்,  காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.