சிவலிங்க சிலையை உடைத்த நபர் கைது...

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 2000 ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்க சிலையை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சிவலிங்க சிலையை உடைத்த நபர் கைது...

மரக்காணம் அருகேயுள்ள பெருமுக்கல் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள மலைக்கு மேலே ஒரு சிவாலயமும், மலைக்கு கீழ் ஒரு சிவாலயமும் அமைந்துள்ளன.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவர், கோவில் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கத்தை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் ராமுவை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.