ஓடும் பேருந்தில் சிகரெட் பிடித்த நடத்துனர்...வீடியோ எடுத்த பயணிகள்...!

ஓடும் பேருந்தில் சிகரெட் பிடித்த நடத்துனர்...வீடியோ எடுத்த பயணிகள்...!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு பேருந்தில் புகைப்பிடித்த படி படியில் நின்ற பேருந்து நடத்துனரின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. 

பழனியில் இருந்து அரசு பேருந்து ஒன்று தேனிக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுள்ளது. பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத நடத்துநர், பேருந்தின் பின்புற படிக்கட்டில் நின்றவாறு, புகைப்பிடித்தப் படி சென்றுள்ளார்.

இதையும் படிக்க : " பேப்பரே இல்லாத இடத்தில் பேனாவை எதற்கு வைக்கனும்..?" - நடிகை கஸ்தூரி பேச்சு.

இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அத்துடன், மோட்டார் வாகன சட்ட விதிகள், இதுபோல் பணியில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு பொருந்தாதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.