ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தையும் சேர்க்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் - சிலம்பம் பயிற்சி குழு கோரிக்கை

ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தையும் சேர்க்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் என சிலம்பம் பயிற்சி குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தையும் சேர்க்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் - சிலம்பம் பயிற்சி குழு கோரிக்கை

ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தையும் சேர்க்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் என சிலம்பம் பயிற்சி குழு கேட்டுக்கொண்டுள்ளது. நேபாளத்தின் பொக்ரா பகுதியில்,  உலக அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.

இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாக்குமரி, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 38 சிலம்ப குழுக்கள் கலந்து கொண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளன. இதனிடையே சென்னை திரும்பிய அவர்களுக்கு சென்ட்ரல் எம்ஜிஆர்  ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பேசிய அனைத்து சிலம்பம் கூட்டமைப்பு ஆசான் ப்ரித்திவிகுமார்,  ஒலிம்பிக் போட்டிக்கு சிலம்பத்தை எடுத்து செல்ல தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.