அமராவதி அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக நீர் திறப்பு!!

அமராவதி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 9 மதகுகள்  வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

அமராவதி அணையில் இருந்து 9 மதகுகள்  வழியாக நீர் திறப்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு மறையூர் , காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் அனைக்கு வினாடிக்கு 8328 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் அணையின் பாதுகாப்பு பிரதான ஓன்பது மதகுகள் வழியாக ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர  கிராமங்களான கொழுமம் , ருத்ரா பாளையம் குமரலிங்கம் ,மடத்துக்குளம் கணியூர் உள்ளிட்ட  பல்வேறு கிராம மக்கள் பாதுகாப்பான  இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தபட்டுள்ளது.