திருவல்லிக்கேணியில் உள்ள கடையில் திடீர் தீ விபத்து...

திருவல்லிக்கேணியில் உள்ள கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவல்லிக்கேணியில் உள்ள கடையில் திடீர் தீ விபத்து...

திருவல்லிக்கேணி பாரதி சாலையில் செயல்பட்டு வரும் கிட்ஸ் கிளப் என்கிற துணிக்கடையை ரிஸ்வான் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த ஆறு மாத காலமாக கடை மூடப்பட்டுள்ள நிலையில் பேன்சி ஸ்டோரின் (Kids Fancy) திடீரென மின்கசிவு காரணமாக தீ பற்றி உள்ளது இது தொடர்பாக அருகில் இருப்பவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது இதனைத்தொடர்ந்து திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சுமார் அரை மணி நேரத்தில் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

பின்னர் செய்தியாளரிடம் பேசிய திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் :- 

திருவல்லிக்கேணி பகுதியில் தீப்பற்றி உள்ளது என அழைப்பு வந்தவுடன் திருவல்லிக்கேணி சரகத்தில் இருந்து ஒரு வண்டி சம்பவ இடத்திற்கு உடனே சென்றது. இரவு 7 மணி அளவில் தீப்பற்றி உள்ளது. ஆறு மாத காலமாக பேன்சி ஸ்டோர் கடை திறக்கப்படவில்லை என்பதாலும், திடீரென இன்று இரவு மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றி உள்ளது தீப்பற்றிக் இருக்கக்கூடிய இடமானது கட்டிடத்திற்கு முழுதாக செல்லக்கூடிய மின்சாரப் பெட்டியில் தான் மின் கசிவு ஏற்பட்டு உள்ளது, சுற்றி உள்ள கடைகளுக்கு மற்றும் நபர்களுக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.