வெடி விபத்தில் பெண் பலி: நிவாரண நிதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வெடி விபத்தில் பெண் பலி:  நிவாரண நிதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு நிவாரண நிதியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவசங்குபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் இரண்டு அறைகள் சேதமடைந்த நிலையில், மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படிக்க : 12 மணிநேர வேலை திருத்த சட்டம்... கண்டனம் தெரிவித்த எடப்பாடி...!

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் விபத்தில் உயிரிழந்த ஜெயசித்ரா உடலை மீட்டனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து, பட்டாசு ஆலை வெடி விபத்தில்  உயிரிழந்த ஜெயசித்ரா குடும்பத்திற்கு நிவாரணம் நிதியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.