திட்டத்தை தொடங்கும் போது உள்ள ஆர்வம்...முடிக்கும் வரை இருக்க வேண்டும் - முதலமைச்சர்!

திட்டத்தை தொடங்கும் போது உள்ள ஆர்வம்...முடிக்கும் வரை இருக்க வேண்டும் - முதலமைச்சர்!

முன்னுரிமை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.


தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முன்னுரிமை திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் 2-வது நாளாக நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திட்டத்தை தொடங்கும் போது இருக்கும் ஆர்வம் அதனை செயல்படுத்தி முடிக்கும் வரை இருக்க வேண்டுமென தெரிவித்தார்.

இதையும் படிக்க : தொடரும் மாணவர்களின் தற்கொலை...ஐ.ஐ.டி.அளித்த விளக்கம்...அறிக்கை வெளியிட்ட நெல்லை முபராக்!

மேலும் திட்ட செயல்பாடுகளில் சில இடங்களில் இன்னும் கவனம் தேவை என்பதை கள ஆய்வில் அறிந்துகொண்டதாக முதலமைச்சர் கூறினார். மாதம் தோறும் இரண்டு இடங்களுக்கு சென்று அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்த முதலமைச்சர், நிலுவையில் உள்ள பணிகளை முன்கூட்டியே முடிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.