“அதிகாரிகளின் அலட்சியம் வருத்தமளிக்கிறது”- சமூக ஆர்வலர்கள் கவலை!!!

மேட்டுப்பாளையத்தில் சமீப காலமாக சர்ச்சையாக ஓடிக்கொண்டிருக்கும் யானை தேடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

“அதிகாரிகளின் அலட்சியம் வருத்தமளிக்கிறது”- சமூக ஆர்வலர்கள் கவலை!!!

மேட்டுப்பாளையத்தில் உடல் மெலிந்த நிலையில் தண்ணீர் குடிக்க அவதிப்பட்டு வரும் ஆண் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டியுள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை சிறுமுகை ஆகிய வனச்சரகங்களில் யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுமான், உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உயிர் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில்  மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நோய்வாய்ப்பட்ட காட்டுயானை ஒன்று நடமாடி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மனித எல்லை பிரச்சனைக்கு பலியாக இருந்த யானை!

யானையின் வாய்பகுதியில் பிரச்சனை ஏற்பட்டு உணவு தண்ணீர் உட்கொள்வதில் பிரச்சனை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் கல்லார் தூரி பாலம் அருகே  உடல் மெலிந்த நிலையில் கல்லார் ஆற்றில் தண்ணீர் குடிக்க அந்த யானை வந்துள்ளது.

அப்போது அந்து வழியைச் சென்ற பொதுமக்கள் யானையைப் பார்த்தவுடன் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதில் யானை தண்ணீர் குடிக்க சிரமப்பட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்தக் காட்டு யானை கடந்த 2 தினங்களாக அப்பகுதியில் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தற்போது செல்போன்களில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | ஆனைக்கட்டி வனப்பகுதியில் உடல் சோர்வுடன் காணப்பட்ட யானை.. சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தீவிரம்!!

யானையின் உடல் நிலை மிகவும்  மெலிந்து காணப்படும் நிலையில் இதுவரை வனத்துறையினர் அந்த  யானையை கண்டுகொள்ளாதது அலட்சியமாக இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது அந்த யானையை வனத்துறையினர்  கண்காணித்து தகுந்த சிகிச்சை அளித்து  யானையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று சமூக வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.