தேசிய உழவர் நாளை முன்னிட்டு வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்!!

விவசாயிகளுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்ட மு.க.ஸ்டாலின்...

தேசிய உழவர் நாளை முன்னிட்டு வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்!!

தேசிய உழவர் நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் இன்று தேசிய உழவர் நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய உழவர் நாளை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்! உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.