சாலையை ஆக்கிரமித்து வேலி அடைத்த தனி நபர்கள்.. தவிக்கும் மக்கள்.. அகற்ற கோரிக்கை!!

கோவில்பட்டி அருகே ஆக்கிரமிப்பு காரணமாக சாலை வசதியில்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

சாலையை ஆக்கிரமித்து வேலி அடைத்த தனி நபர்கள்.. தவிக்கும் மக்கள்.. அகற்ற கோரிக்கை!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாலம்பட்டி கிராமம் மேல தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த தெருவிற்கு செல்லக்கூடிய பாதையை, தனி நபர்கள் வேலி அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால்,  இப்பகுதி மக்கள் சாலை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

கிராமத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்றால் ஊரை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.