இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி ஒழுங்கற்றுக்குழு பரிந்துரைப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்தி வருகிறது. காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 89-வது கூட்டம் அதன் தலைவா் வினித் குப்தா தலைமையில் கடந்த திங்கட்கிழமை காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கா்நாடக அணைகளில் உள்ள நீா் இருப்பு வரத்தை கணக்கிட்டு நவம்பா் மாதத்தில் 15 நாட்கள் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி வழங்க அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடக அரசு தரப்பில், நீர்வரத்து இல்லாததால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறப்பட்டது.

இறுதியாக, நவம்பா் 1 முதல் 23-ம் தேதி வரை 23 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் 600 கன அடி தண்ணீா் பிலிகுண்டுலுவில் கா்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விடவேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது. இதையடுத்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்படும் என்று தொிகிறது.