சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை...

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீட்டித்தது. 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை...

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீட்டித்தது. 

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் நகரின் பல்வேறு பகுதிகளில்  நள்ளிரவில் நல்ல கண மழை பெய்தது.

குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், வேளச்சே,ரி வடபழனி, அசோக் பில்லர், கேகே நக,ர் கோடம்பாக்க,ம் அண்ணா சாலை பகுதிகளில் தற்பொழுது பரவலாக கண மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை நகரை சுற்றி உள்ள பகுதிகளிலும் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.