”மூன்றே மாதத்தில் கருணாநிதிக்கு பாடம் புகட்டியது போல....” பிரசாரத்தில் ஈபிஎஸ்!!

”மூன்றே மாதத்தில் கருணாநிதிக்கு பாடம் புகட்டியது போல....” பிரசாரத்தில் ஈபிஎஸ்!!

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தென்னரசுவை வெற்றி பெறச் செய்யுங்கள் என ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அன்பான வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஈரோடு மாநகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு உயர்மட்ட பாலங்கள் கட்டி தீர்வு கண்டது அதிமுக ஆட்சியில் தான் எனக் கூறிய ஈபிஎஸ் ஏற்கனவே தொகுதிக்கு நன்கு அறிமுகமான உங்களில் ஒருவரான அதிமுக வேட்பாளர் தென்னரசுவை தான் வேட்பாளராக நிறுத்தி உள்ளோம் எனக் கூறியுள்ளார்.

வீட்டு வரி, கடை வரி,  குப்பை வரி,  குடிநீர் வரியை திமுக கடுமையாக உயர்த்தியதை மக்கள் மறந்து விட வேண்டாம் எனக் குறிப்பிட்டு கூறிய ஈபிஎஸ்  நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து நம்மை ஏமாற்றி ஓட்டு போட்ட அடிமைகள் என்று நினைத்து பின்வாசல் வழியே ஆட்சியைப் பிடித்த திமுகவின் முதலமைச்சர் முதல் அனைவருக்கும் நம் எதிர்ப்பை காட்ட இந்த தேர்தல் நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளார்.

1989இல் மதுரை கிழக்கு மருங்காபுரி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை அங்கீகரித்து ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் கருணாநிதிக்கு பாடம் புகட்டியது போல திமுக ஆட்சிக்கு இறுதி அத்தியாயம் எழுத இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.....” ஓபிஎஸ்!!!