”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.....” ஓபிஎஸ்!!!

”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.....” ஓபிஎஸ்!!!
Published on
Updated on
1 min read

கடந்த வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.  உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதும் செல்லும் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருந்தது உச்சநீதிமன்றம்.  

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.  அப்போது பேசிய அவர் கட்சியின் இடைக்கால தலைவராக  எடப்பாடி பழனிசாமி நீடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது தனக்கு பின்னடைவு அல்ல என்று கூறியுள்ளார்.  

தொடர்ந்து பேசிய அவர் நீதிக்காக மக்கள் மத்தியில் செல்வேன் என்று கூறியதோடு எந்த முடிவும் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த முடிவுக்குப் பிறகு, எங்கள் கட்சியினர் மேலும் உற்சாகமடைந்துள்ளனரே தவிர இது அவர்களுக்கு அதிர்ச்சி அல்ல எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ஸின் தாயார் காலமானார்!!!

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com