நீட் தேர்வுக்கு விண்ணப்பம்: அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிவு!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பம்:  அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிவு!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத இதுவரை 6 ஆயிரத்தில் 412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேரும் விண்ணப்பித்துள்ளனர் எனவும் கூறியுள்ளது.