"சென்னை" பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு!!.. திருடனுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண் மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப், பணம் உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

"சென்னை" பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு!!.. திருடனுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெண் மருத்துவரான நஷ்ரா கரீம். இவர் இன்று மதியம் 1 மணியளவில் அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள இனிப்பகம் அருகில் தனது காரை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றார்.

கடைக்குச் சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது காரின் வலதுபுறத்திலுள்ள பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த லேப்-டாப், பணம் உள்ளிட்ட உடைமைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பெண் மருத்துவர் நஷ்ரா கரீம் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை வலைவீசித் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.