அத்திக்கடவு - அவினாசி திட்டம்; 3 மாவட்டங்கள் பயன்பெறும் - அமைச்சர் பேட்டி!

அத்திக்கடவு - அவினாசி திட்டம்; 3  மாவட்டங்கள் பயன்பெறும் - அமைச்சர் பேட்டி!

அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகள் வரும் மே மாதம் இறுதியில் முடிக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண்ணுண்ணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இதையும் படிக்க : பாஜக கோரிக்கை... மனுவை திரும்ப பெற்ற அதிமுக வேட்பாளர்...!

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் ஆயிரத்து 106 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசனம் பெறும் வகையில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் அமைந்துள்ளது என கூறினார். இந்த திட்ட பணிகள் வரும் மே மாதம் இறுதியில் முடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.