ஒய்யாரமாய் நடை போட்ட யானை!!! பதறிய பொதுமக்கள்!!!

பர்கூர் மலையில் நள்ளிரவில் காவல் நிலையம் அருகே ஒய்யாரமாய் நடந்து வந்த காட்டு யானையை பொது மக்கள் ஒன்று கூடி விரட்டியுள்ளனர்.

ஒய்யாரமாய் நடை போட்ட யானை!!! பதறிய பொதுமக்கள்!!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது பர்கூர் மலைப்பகுதி. நேற்று நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை, பர்கூர் காவல் நிலையம் பகுதியில் சாலையில் ஒய்யாரமாக நடைபோட்டு சென்றது. நள்ளிரவில் புகுந்த யானையை நாய்கள் குறைத்துக் கொண்டு விரட்டியது. அதனை சற்றும் பொருட்படுத்தாமல் யானை சுற்றி திரிந்தது. 

மேலும் படிக்க | மனித எல்லை பிரச்சனைக்கு பலியாக இருந்த யானை!

தொடர்ந்து வனப்பகுதிக்குள் யானையை பொதுமக்கள் விரட்ட முயற்சித்த போது சற்றும் எதிர்பாராமல் பிளிரி கொண்டே அவர்களை துரத்த யானை முற்பட்டுள்ளது. இதனால், சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை வனப் பகுதிக்குள் பொதுமக்கள் விரட்டினர்.

ஊருக்குள் யானை வராமல் தடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | ஆனைக்கட்டி வனப்பகுதியில் உடல் சோர்வுடன் காணப்பட்ட யானை.. சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தீவிரம்!!