ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்.. பெரும் பரபரப்பு!!

ஒற்றைத் தலைமை வேண்டுமென வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்..  பெரும் பரபரப்பு!!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழு உறுப் பினர்கள் எனும் பெயரில் சசிகலா ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனிடையே, அதிமுக-வில் ஒற்றைத் தலைமை வேண்டுமென வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி அலுவலகம் முன்பு கூடிய ஏராளமான ஓ பிஎஸ் ஆதரவாளர்கள் ஓ பிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கள் எழுப் பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக கட்சி அலுவலக வாயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் கூட்டத்தின் போதும் ஓ. பி.எஸ். - ஈ. பி.எஸ். ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை கோரி முழக்கம் எழுப் பியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.