தூக்க மாத்திரை தராததால் ஆத்திரமடைந்து தாக்கிய நபர்....சிசிடிவியில் சிக்கிய காட்சி..!

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ஒருவர் மெடிகளில் தூக்க மாத்திரை கேட்டு, மெடிக்கல் ஓனர் மாத்திரையை கொடுக்காததால் ஆத்திரத்தில் அவரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தூக்க மாத்திரை தராததால் ஆத்திரமடைந்து தாக்கிய நபர்....சிசிடிவியில் சிக்கிய காட்சி..!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மெடிக்கலில் வடவேர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் மருந்து ஒப்புகை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை கேட்டு தினமும் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் நேற்று இரவு கடைக்கு வந்த செந்தில் மற்றும் அவரது அண்ணன் மகன் இமயவர்மன் ஆகியோர் தூக்க மாத்திரை கேட்டு உள்ளனர். ஆனால் அந்த மெடிக்கல் ஓனர், மருத்துவர் பரிந்துரைத்த ஒப்புகை சீட்டு இல்லாமல் தரமாட்டோம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில் மற்றும் அவரது அண்ணன் மகன் இமயவர்மன் ஆகியோர் மெடிக்கல் ஓனர் ரவி குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து குடவாசல் காவல் நிலையத்தில் மெடிக்கல் ஓனர் ரவிக்குமார் புகார் கொடுத்துள்ளார். அதேபோல் செந்தில், அவரது அண்ணன் மகன் இமயவர்மன் ஆகியோரும், மெடிக்கல் ஓனர் ரவிக்குமார் ஒருமையில் திட்டியதாக புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார்   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.