8 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த குழந்தை - மகிழ்ச்சியடைந்த பெற்றோர்!

8 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த குழந்தை -  மகிழ்ச்சியடைந்த பெற்றோர்!

திருவள்ளூர் மாவட்டத்தில், கடத்தப்பட்ட குழந்தை 8 ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ளதால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருமுல்லைவாயலை சேர்ந்த ஜான் ஜெபராஜ் - தமிழரசி தம்பதியினருக்கு, கடந்த 2014 ஆம் ஆண்டு அயனாவரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, அவர்களுடன் பழகிய தேவி என்ற பெண், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

இதையும் படிக்க : 50 வருஷத்துக்கும் முன்னாடி நீர் ஆதாரம்...இப்போ...மிக மோசமான கூவம் நதி...மாறியது எப்படி?

இதையடுத்து 8 ஆண்களாக குழந்தையை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்த பெற்றோர்கள், முதலமைச்சர் தனி பிரிவில் புகார் அளித்தனர். இந்நிலையில் தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்த போலீசார், புழல் அருகே வசித்து வந்த தேவியை கைது செய்து, குழந்தையை மீட்டனர்.