பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த 4 குற்றவாளிகள்.. வேளாங்கண்ணியில் தனிப்படை போலீசாரால் கைது!!

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த சென்னை மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த குற்றவாளிகள் 4 பேர்  வேளாங்கண்ணியில் தனிப்படை போலீசாரால் கைது  செய்யப்பட்டனர்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த 4 குற்றவாளிகள்.. வேளாங்கண்ணியில் தனிப்படை போலீசாரால் கைது!!

சென்னை காவல் நிலையத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த குற்றவாளிகள் 4 பேர் தலைமறைவாகி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு தனியார் விடுதியிலுள்ள ஒரு அறையில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த எழிலரசன், விக்னேஷ், தேவசகாயம், திருவண்ணாமலை யைச் சேர்ந்த திவாகரன் ஆகிய 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்‌.

இவர்கள் மீது சென்னையை சுற்றியுள்ள பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.