25 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 வடமாநில இளைஞர்கள் கைது...

சென்னை செம்மஞ்சேரியில்,  கஞ்சா வைத்திருந்ததாக 3 வடமாநில இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  

25 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 வடமாநில இளைஞர்கள் கைது...

அண்மையில் செம்மஞ்சேரி பகுதியில் சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர்கள் 3 பேரை, அப்பகுதி போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்களில் ஒருவரான சுமன் மேடவாக்கத்தில் தச்சு, கூலி வேலை செய்து வந்ததாகவும், மற்ற இருவரும் வேளச்சேரியில் உள்ள டீக்கடையில் பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அவர்களை சோதனையிட்டதில் 25 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் திரிபுராவை சேர்ந்தவர்கள் என்றும், திரிபுராவிலிருந்து ரயிலில்  கஞ்சாவை கடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.