ஐபிஎல் ரசிகர்களுக்காக...! மெட்ரோ ரயில்...!!

ஐபிஎல் ரசிகர்களுக்காக...! மெட்ரோ ரயில்...!!

கிரிக்கெட் ரசிகர்களுக்காக நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்காக இன்று ஒரு நாள் மட்டும் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிதட்டுள்ளது.

ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான விளையாட்டு போட்டி இன்று நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு ஏதுவாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயண நேரத்தை நீட்டித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக, ஐபிஎல் போட்டி முடிந்ததும், அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து 5 முதல் 15 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கடைசி மெட்ரோ ரயிலானது அரசினர் தோட்டம் ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.