வெற்றியுடன் கணக்கை தொடங்குமா இந்திய அணி..? இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ளது. 

வெற்றியுடன் கணக்கை தொடங்குமா இந்திய அணி..? இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

இந்நிலையில் இந்திய அணி அடுத்து இலங்கையுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. முதல் 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று  மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.  

கடந்த தொடரில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல காயத்தில் இருந்து குணமடைந்த ரவீந்திர ஜடேஜாவும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் காயம் காரணமாக தீபக் சாஹர் , சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளனர். முன்னாள் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் ரி‌ஷப்பண்ட் ஆகியோருக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.