தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இந்திய அணிக்கு புதிய கேப்டன் மற்றும் துணை கேப்டன் நியமனம்!!..

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான  ஒருநாள் கிரிக்கெட்  தொடருக்கு இந்திய அணியின் புதிய  கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இந்திய அணிக்கு புதிய கேப்டன் மற்றும் துணை கேப்டன் நியமனம்!!..

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இப்போட்டிகள் முடிந்ததும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதேபோல் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 ருதுராஜ் ஐபிஎல்2021 சீசனில் 635 ரன்கள் குவித்ததற்காக ஆரஞ்சு தொப்பியை வென்றார். இதேபோல் விஜய் ஹசாரே டிராபி தொடரின் 5 போட்டிகளில் 4 சதம் உள்பட 603 ரன்கள் குவித்தார்.முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் 9 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கு திரும்பியுள்ளனர். 

ஒருநாள் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட அணியின் விவரம்: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சாஹல், அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.