ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி.. கோப்பையை வெல்லப்போவது யார்?

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி.. கோப்பையை வெல்லப்போவது யார்?

15வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், இறுதி போட்டிக்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் முன்னேறின.

இந்நிலையில், இன்று இரவு  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.

நடப்பு சீசனில் இந்த இரு அணிகளும் 2 முறை மோதியுள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன.

இறுதி போட்டியை காண பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  ஆகியோர் மைதானத்திற்கு செல்ல உள்ளதால், குஜராத் அணி வெற்றி பெறும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.