புரோ கபடி லீக் போட்டியில் கோப்பையை வென்ற அணி எது தெரியுமா?

புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவை வீழ்த்தி முதல் முறையாக டெல்லி அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

புரோ கபடி லீக் போட்டியில் கோப்பையை வென்ற அணி எது தெரியுமா?

12 அணிகளுக்கு இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு பாட்னா மற்றும் டெல்லி அணிகள் தகுதி பெற்றன.  

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் சமமாக மல்லுக்கட்டியதால், விறுவிறுப்பாக காணப்பட்டது.

ஒரு கட்டத்தில் போட்டி முடிவடைய 10 நிமிடங்கள் மட்டுமே இருக்க இரண்டு அணிகளும் 28-28 என்ற கணக்கில் சமநிலை வகித்தன. இறுதி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணி 37-36 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக நவீன் குமார் 12 புள்ளிகள் எடுத்து அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.