இத்தாலியின் சின்னரை போராடி வென்ற ஜோகோவிச்.. அரையிறுதிக்கு முன்னேற்றம்!!

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்துக்கு நடப்பு சாம்பியன் ஜோகோவிச், நூரி ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

இத்தாலியின் சின்னரை போராடி வென்ற ஜோகோவிச்.. அரையிறுதிக்கு முன்னேற்றம்!!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், லண்டனில் நடைபெற்ற வருகின்றன.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒற்றில், நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இளம் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஜோகோவிச்  5-7, 2-6, 6-3, 6-2, 6-2 என்ற செட்கணக்கில் சின்னரை போராடி தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின், அமெரிக்காவின் கேமரூன் நூரியுடன் மோதினார்.

இப்போட்டியில், 3-6, 7-5, 2-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கோஃபினை வீழ்த்தி நூரி அரையிறுதிக்கு முன்னேறினார். வரும் 8ம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதியில், ஜோகோவிச்சை நூரி எதிர்கொள்கிறார்.