டேக்வாண்டோ போட்டியில் அருணா தன்வார் கால் இறுதிக்கு தகுதி...

டோக்கியோ பாராலிம்பிக் டேக்வாண்டோ போட்டியில் இந்தியாவின் அருணா தன்வார் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டேக்வாண்டோ போட்டியில் அருணா தன்வார் கால் இறுதிக்கு தகுதி...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியானது கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் வீரர்கள் பங்கேற்று, பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், 44 முதல் 49 கிலோ எடை பிரிவு மகளிருக்கு நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில், இந்தியாவின் அருணா தன்வார் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார். கால் இறுதி சுற்றில் பெரு நாட்டு வீராங்கனையை எதிர்கொள்கிறார்.