இந்திய அணியில் திடீர் மாற்றம்...? ரோஹித்துக்கு வரும் பிரஷர்...அந்த 11 பேர் யார் யார்?

இந்திய அணியில் திடீர் மாற்றம்...? ரோஹித்துக்கு வரும் பிரஷர்...அந்த 11 பேர் யார் யார்?

ஆசிய கோப்பை ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக இன்று இந்திய களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தொடர் வெற்றி:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடர் வெற்றியின் மூலம் இந்திய அணி எளிமையாக சூப்பர் 4 சுற்றுக்கு தேர்வானது.

இந்தியா வீழ்ச்சி:

ஆனால், இதற்கு பிறகு இந்திய அணிக்கு லேசான சறுக்கல் ஏற்பட்டது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் கடைசி ஓவர் வரைக்கும் விறுவிறுப்பாக சென்று இந்திய அணி வீழ்ந்தது. 

இலங்கை VS இந்திய அணி மோதல்:

இதனைத்தொடர்ந்து, இன்று நடக்கும் ஆசிய கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மோதவுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழல் உள்ளது. ஏனென்றால், FINALS செல்வதற்கு இன்றைய ஆட்டம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவதால் வெற்றி என்பது இந்திய அணிக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் எடப்பாடி கதவை தட்டும் ஓபிஎஸ் டீம்.... ஈபிஎஸ் வகுக்கும் யூகம் என்ன?

இந்திய அணியில் மாற்றம்:

இந்நிலையில் இன்றைய தினம் இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் என்பது வெகு சிறப்பாகவே இருக்கிறது. ராகுல், ரோஹித் இருவரும் மீண்டும் நல்ல பார்மிற்கு வந்துள்ளனர். அதேபோல், விராட்கோலியும் தற்போது நல்ல பார்மில் உள்ளார். அதேபோன்று, சூர்யா குமார் யாதவ் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

இந்திய வீரரை நீக்க கோரிக்கை:

இந்த சமயத்தில் இந்திய அணியில் வீரர் ஒருவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. அதாவது, இந்த தொடரில் கடந்த மூன்று போட்டியிலும் சஹால் சரியாக பவுலிங் செய்யவில்லை என்று கூறி வருகின்றனர். ஏனென்றால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கூட இவர் மோசமாகவே பவுலிங் செய்தார் என்றும், அதேபோல் ஹாங்காங் உடனான போட்டியிலும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்றும் அவர் மீது தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரோஹித்துக்கு வரும் பிரஷர்:

இதன் காரணமாகவே, ரோஹித்துக்கு அவரது ரசிகர்கள் தொடர் பிரஷர் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், சஹாலை நீக்கிவிட்டு, மூத்த வீரரான அஸ்வினை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து வருகின்றனர்.  இக்கட்டான சூழ்நிலையில் அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்வார் என்று கூறி வருகின்றனர். இதனால் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் ரோஹித், ராகுல், கோலி, சூர்யா குமார் யாதவ், பண்ட், பாண்டியா, ஹூடா, புவனேஷ்வர்குமார், அஸ்வின், ரவி பிஸ்னோய், அர்ஷிதீப் சிங் ஆகியோர் ஆட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது...