கொரோனாவின் 3ஆம் அலை இந்த வாரத்தில் உச்சமடையும் - ஐஐடி பேராசிரியர் எச்சரிக்கை

மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா 3 ஆம் அலை இந்த வாரத்தில் உச்சமடையும் என ஐஐடி பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் 3ஆம் அலை இந்த வாரத்தில் உச்சமடையும் - ஐஐடி பேராசிரியர் எச்சரிக்கை

மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா 3ஆம் அலை இந்த வாரத்தில் உச்சமடையும் என ஐஐடி பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கொரோனா 3 ஆம் அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் கூறி வரும் நிலையில் கடந்த இரு தினங்களாக கொரோனா தினசரி பாதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா 3 ஆம் அலை இந்த வாரத்தில் உச்சத்தை அடையும் என ஐஐடி கான்பூரைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே 3 ஆம் அலை உச்சத்தை எட்டிவிட்டதாக தெரிவித்த அவர், நிபுணர்கள் கணித்ததை காட்டிலும் தொற்று பரவல் அதி தீவிரமாக பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் முந்தைய நாள் பாதிப்பை காட்டிலும் நேற்றைய தினசரி பாதிப்பு குறைந்திருக்கும் நிலையில் ஐஐடி பேராசிரியரின் எச்சரிக்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.