ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் 5 கோடி வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் இணைப்பு... பிரதமர் பெருமிதம்...

5 கோடி வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் இணைப்பானது, ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் 5 கோடி வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் இணைப்பு... பிரதமர் பெருமிதம்...

ஜல் ஜீவன் இயக்கத்தின் ஒருபகுதியான கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம குடிநீர் மற்றும் துப்புறவுக் குழுவுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுதந்திரம் பெற்றதிலிருந்து 2019ம் ஆண்டுவரை நாட்டில் 3 கோடி வீடுகளுக்குத்தான் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஜல் ஜீவன் இயக்கம் கடந்த2019ம் ஆண்டு தொடங்கப்பட்டபின் 1.25 லட்சம் கிராமங்களில் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இன்று நாட்டில் 80மாவட்டங்களில் உள்ள 1. 25 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர்  இணைப்பு கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் 2 ஆண்டுகளில் முடித்துள்ளோம் என்றும் குழாய்மூலம் குடிநீர் இணைப்பு 31 லட்சமாக இருந்தது, தற்போது 1.60 கோடியாக உயர்ந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.