புதுச்சேரியில் 27 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில்  அமைச்சர்கள் பதவியேற்பு விழா : சபாநாயகர் அறிவிப்பு

புதுச்சேரியில் வருகிற 27 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில்  அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில்  27 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில்  அமைச்சர்கள் பதவியேற்பு விழா : சபாநாயகர் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்தது.இதனையடுத்து அம்மாநிலத்தின் முதலமைச்சராகா என். ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் பா.ஜ.க மற்றும் என். ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் யார் யாருக்கு கொடுப்பது என இழுப்பறி நீடித்தது. இதனையடுத்து இருவருக்குள்ளும் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சர்கள் பட்டியலை இன்று காலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதலமைச்சர் வழங்கினார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம்,வருகிற 27 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியெற்க உள்ளதாக தெரிவித்தார்.மேலும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களுக்கு இதுவரை இலாக்கள் ஒதுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.