இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ்...! தீவிரம் காட்டும் பிரியங்கா காந்தி...!

இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ்...!  தீவிரம் காட்டும் பிரியங்கா காந்தி...!

கர்நாடகாவில் 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில்,  அனல் பறக்கும் இந்த இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நாளை மறு நாள் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 

இந்த தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் பிரதமர் நரேந்திர‌ மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி, பிரியங்கா என பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இன்று இறுதிக்கட்ட பிரசாரம் என்பதால், பெங்களூரு, விஜயநகரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். 

Priyanka Gandhi Vadra: For the fight now, Congress needs people with guts,  ideology and stamina: Priyanka Gandhi Vadra - The Economic Times

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் ஊழலுக்கு முற்றுப்புள்ளி மக்கள் முடிவு செய்து விட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு பெற உள்ள நிலையில், பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, தாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தெரிவித்தார். 

எங்களுக்கு எண்ணிக்கையில் நம்பிக்கை இல்லை என்ற அவர், மக்களை நாங்கள் பெரிதும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். காரணம் தேர்தலில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முடிவு செய்துவிட்டதாகவும் பிரியங்கா காந்தி அப்போது கூறினார். 

இதையும் படிக்க     } கேரளா: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!