புதுச்சேரி ஆளுநரை மக்கள் நேரில் சந்திக்கலாம்...ஆளுநர் மாளிகை அறிவிப்பு!

புதுச்சேரி ஆளுநரை மக்கள் நேரில் சந்திக்கலாம்...ஆளுநர் மாளிகை அறிவிப்பு!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவ்வப்போது பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்யும்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க ஆளுநர் மாளிகை முன்பு புகார் பெட்டி வைக்கப்பட்டது.

மேலும் புகார் பெட்டியில் வரும் புகார்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுமக்கள், துணைநிலை ஆளுநரை நேரடியா சந்திக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் இன்று தொடங்கியது.

முன்பதிவு செய்தவர்களின் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட மக்களிடம் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் குறைகளைக் கேட்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இன்று மாற்றுத்திறனாளி உட்பட 20 பேர்களை ஆளுநர் சந்தித்தார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாதந்தோறும் ஒவ்வொரு முதல் மற்றும மூன்றாவது சனிக்கிழமைகளில் நடைபெற உள்ளது மேலும் துணைநிலை ஆளுநரைச் சந்திக்க விரும்புபவர்கள் 0413-2334050, 2334051 என்ற தொலைபேசி எண்களில் அல்லது adctolg.pon@nic.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.