டெல்லிக்கே மீண்டும் திரும்பிய விமானம்... காரணம் என்ன?!

டெல்லிக்கே மீண்டும் திரும்பிய விமானம்... காரணம் என்ன?!

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டது.  

டெல்லி-லண்டன் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் டெல்லி விமானநிலையத்திற்கே திரும்பியுள்ளது. இதில் பயணம் செய்த பயணி ஒருவர் சக பயணிகளுடன் சண்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது.  அவர் பல எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, தொடர்ந்து விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பியுள்ளது. 

பிரச்சினையில் ஈடுப்பட்ட நபர் கேபின் பணியாளர்களுடன் சண்டையிட்டதில்  இருவர் காயமடைந்துள்ளனர். பின்னர் விமானம் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டு, தரையிறங்கியதும் அந்த நபர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் மீது எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுமார் 225 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.  அவரை விமான நிலையத்தில் தரையிறக்கிய பிறகு விமானம் மீண்டும் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் பதிவான புதிய கொரோனா வழக்குகள்...!!