இராணுவ தேர்வில் ஆள் மாறாட்டம்?!!

இராணுவ தேர்வில் ஆள் மாறாட்டம்?!!

இராணுவ தேர்வில் ஆள் மாறாட்டம் மற்றும் முறைகேடு செய்தவர்களை கைது செய்ய கோரி இராணுவ அதிகாரிகள் புகார் மனு.

நந்தம்பாக்கம் ராணுவ பள்ளியில் நேற்று பாதுகாப்பு சிவில் ஆட்சேர்ப்பு வாரிய தேர்வு நடைபெற்றது.  ஆயிரத்து 728 பேர் கலந்து கொண்ட இந்த தேர்வில், அரியானா மாநிலத்தை சேர்ந்த 29 பேர் சிறிய அளவிலான ப்ளூடூத் டிவைஸை பயன்படுத்தி தேர்வு எழுதியதாகவும், சஞ்சய் என்ற நபர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ராணுவ மருத்துவமனை சுபேதார் ஸ்ரீதர் தலைமையிலான 10 ராணுவ அதிகாரிகள், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் படிக்க:   வனப்பகுதியை 33% விரிவுபடுத்த நடவடிக்கை....வனத்துறை அமைச்சர் பேட்டி!!!