லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் செலுத்தும் விதமாக...ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை

லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் செலுத்தும் விதமாக...ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை

மறைந்த பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் செலுத்திடும் விதமாக மக்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை இன்று காலை தொடங்கியதும், மறைந்த  பாடகி லதா மங்கேஷ்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, அவை சுமார் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

அந்தவகையில் மாலை 4 மணிக்கு துவங்கிய மக்களவையிலும் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை  ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.